NCET

மலேசியாவில் உண்ணாவிரதம் முடித்துக் கொண்ட தமிழர்கள் நோர்வே ஈழத்தமிழர் அவைக்கும் நன்றி தெரிவுப்பு



மலேசியாவில் அந்நாட்டு காவல்துறையால் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில்,கடந்த எட்டு நாட்களாக உண்ணாவிரதம் இருந்த அறுபதிற்கும் மேற்பட்டத் தமிழர்கள் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட நிலையில் தங்களுக்காக உழைத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார்கள். குறிப்பாக கடலில் தத்தளித்து பின் மலேசிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நாள் முதல் ஆதரவுக் கரம் நீட்டி பல்வேறு வகையில் அவர்களுக்கு உதவியாக இருந்த நோர்வே ஈழத் தமிழர் அவைக்கு தங்களது நன்றியினைத் தெரிவித்துக் கொள்வதாக இன்று கூறினர்.

மேலும், தங்களுடைய இன்னல் தீர்ந்து ஏதாவது ஒரு நாட்டில் தஞ்சம் புகுந்து நல் வாழ்வை வாழத் தொடங்கும் வரை தொடர்ந்து இதே உறுதியுடன் பணியாற்றும்படி பணிவுடன் வேண்டுகோளையும் விடுத்துள்ளனர்.

உண்ணாவிரதம் முடிவுக்கு வந்த நிலையில் அவர்கள் சார்பாக நோர்வே ஈழத்தமிழர் அவை பிரதிநிதியுடன் பேசிய ஒரு தமிழர், " இலங்கைக்கு நாடு கடத்தப்படமாட்டோம் என்ற உத்திரவாதமும் மூன்றாம் நாடு ஏற்கும் பொழுது அவர்களிடம் கப்பலில் வந்திறங்கிய அனைவரையும் ஒப்படைக்கிறோம் என்ற உத்திரவாதமும் மலேசிய அரசால் வழங்கப்பட்ட நிலையில் உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டுவருகிறோம். எமக்காய் இதுவரை குரல் கொடுத்து வந்த மலேசியாவின் மாற்று செயல் அணியின் தலைவர் கலைவாணர் அவர்களுக்கும் பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமி அவர்களுக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் எங்களுக்காக புலம்பெயர் நாடுகளில் இருந்து பணியாற்றிய அனைத்து தலைவர்களுக்கும் குறிப்பாக நோர்வே ஈழத் தமிழர் அவைத் தலைவருக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

எங்களது உண்ணாவிரதத்தினால் மலேசிய அரசுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டிருந்தால் இவ்வேளையில் அவர்களிடம் மன்னிப்பையும் கேட்டுக் கொள்கிறோம். எங்களுக்கு ஆதரவாய் நிற்குமாறு மலேசிய அரசிற்கு கோரிக்கையும் வைக்கிறோம்."

என்று தெரிவித்தார்.


மே 18 முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் முதலாம் ஆண்டு நினைவுப் பேரிணைவு

காலம்: 18.05.2010 செவ்வாய் 17:30 மணி
இடம்: Youngstroget (Oslo)
18 mail

நோர்வே வாழ் தமிழ் மக்களுக்கு....

வரலாற்றின் பெரும் துயரை சந்தித்து, மாபெரும் அவலநிலையில் இனமும் நிலமும் வாழ்ந்து வரும் இன்றைய நிலையில், நமக்கான கடமைகளை செய்ய நோர்வே தமிழ் மக்களின் ஆதரவையும் ஆலோசனைகளையும் நோர்வே ஈழத் தமிழர் அவை எதிர்ப்பார்த்து நிற்கிறது.

அன்பான மக்களே,

நம் இனம் இனி இன்னொரு மே 18 ஆம் நாளை சந்திக்கக் கூடாது. சந்திக்கும் நிலையிலும் நாம் இல்லை. ஆனாலும் துயர் படிந்த, இரத்தம் படிந்த அந்நாளின் கோர முகத்தை நாம் ஒவ்வொரு ஆண்டும் நினைவுக் கூருவதோடு, இவ்வுலகிற்கு எடுத்தியம்பும் கடமையும் நம் முன் இருக்கிறது என்பதை என்றும் மறந்துவிடக் கூடாது.

இவ்வருடம், வன்னிப் பெருந்துயரை சந்தித்து ஓராண்டு நிறைவடைந்துவிட்ட அச்சூழலை நினைவுக் கூர, மக்களே எமக்கு நீங்களே ஆலோசனை சொல்லுங்கள். எமது போராட்டம் மக்கள் போராட்டம். மக்களின் வழிக்காட்டலும் ஆதரவும் எம்முடன் ஒருங்கிணைந்து வரும் வரை எந்தவொரு சக்தியும் எம்மை வெல்ல முடியாது. ஆகவே, வாருங்கள் உறவுகளே! இவ்வருடம் ஒன்றுக்கூடி நம் சோகத்தைப் பகிர்வோம்! நம் துயரத்தை இவ்வுலகிற்கு தெரியப்படுத்துவோம்.

தங்களது ஆலோசனைகளையும் கருத்துக்களையும் கீழே உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

சிவா:   / தொலைபேசி இல: 90580233

நன்றி.

நோர்வே ஈழத் தமிழர் அவை.

நாடு கடந்த தமிழீழ அரசாங்க (நா.க.த.அ) உருவாக்கம் குறித்த மதியுரைக்
குழுவின் அறிக்கை தொடர்பான நோர்வே ஈழத்தமிழர் அவையின் திருத்த
முன்மொழிவுகள்.
(விரிவாக...)

ஓஸ்லோ, 15.02.10

நோர்வேயில் கவனயீர்ப்பு போராட்டம் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு.

ஓஸ்லோ, 04.02.10

நோர்வேத் ஈழத்தமிழர் அவையின் ஏற்பாட்டில் ஸ்ரீ லங்காவின் அறுபத்தி இரண்டாவது சுதந்திரதினம் கரிநாளாக அனுஷ்டிக்கப்பட்டது. ஸ்ரீ லங்காவின் சுதந்திரதினத்தை கரிநாளாகக் கருதி நூற்றுக்கணக்கான நோர்வே வாழ் ஈழத்தமிழர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

கவனயீர்ப்பு போராட்டத்தின் இறுதி நிகழ்வாக நோர்வே வெளிவிவகாரக் குழுவிடம் ஈழத்தமிழர் அவை ஓர் மனுவை கையளித்தது. அம் மனுவில் அடங்கியுள்ள விபரம் பின்வருமாறு.[மேலும்]

பாதுகாப்புக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, நாடு திரும்ப வேண்டிய நிலையில் நோர்வேயில் இருக்கும் ஈழத்தமிழர்களுக்கு

பாதுகாப்புக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, நாடு திரும்ப வேண்டிய நிலையில் நோர்வேயில் இருக்கும் ஈழத்தமிழர்களுக்கு உதவி செய்யும் முகமாக, நோர்வே தமிழர் அவை, ஒரு முகப்படுத்தப்பட்ட விண்ணப்பத்தை அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கவுள்ளது. இதற்காக ஒரு வழக்கறிஞரையும் அமர்த்தியுள்ளது இந்த நிலமையில் இருக்கும் அனத்துத் தமிழர்களையும் எம்மிடம் பதிவு செய்திட வேண்டுகின்றேம்.
[மேலும்]

எம் சொந்த உயிர்துவமே சஞ்சீவியாக எழுந்து பறந்தாக வேண்டும்

பல்வேறு நாடுகளின் தமிழீழ மக்களாணை, மக்களவைத் தேர்தலுக்கான குழுக்களின் பிரதிநிதிகள் டிசம்பர் மாதம் 26, 27ம் திகதிகளில் செருமனியில் ஒழுங்குபடுத்தப்பட்ட மாநாடொன்றில் சந்தித்துக் கலந்துரையாடி தொடர்ச்சியான செயற்பாட்டுக்கான ஒருங்கிணைக்கப்பட்ட முதற்கட்டத் தீர்மானங்களை மேற்கொண்டனர்.[மேலும்]

நோர்வே ஈழத் தமிழர் அவை பொங்கல் வாழ்த்துச் செய்தி

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர் வழக்கு. மலரும் தமிழர் திருநாளாம் தைத் திருநாளில் ஈழத் தமிழ் மக்களின் அரசியல்ää சமூகää பொருளாதார விடுதலைக்கான முன்னெடுப்புக்கள் விரைவுபடுத்தப்பட்டு இனிதாய் நிறைவு காண வாழ்த்தி நிற்கின்றது நோர்வே ஈழத் தமிழர் அவை. ஈழத் தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழ்கின்ற நாடொன்றில் முதன் முறையாக சனநாயக விழுமியங்களுக்கு அமைவான தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட ஓர் அமைப்பே நோர்வே ஈழத் தமிழர் அவை.

நோர்வே ஈழத் தமிழர் அவையின் ஆரம்ப கட்ட நடவடிக்கையாக அவையை தமிழ்நாட்டு மற்றும் உலகத் தமிழர் மத்தியில் அறிமுகப்படுத்தும் செயற்பாடு முடுக்கி விடப்பட்டுள்ளது. தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் கட்டமைப்பை கட்டியமைக்கும் பணியும் விரைவுபடுத்தப்பட்டுள்ளது. நோர்வே ஈழத் தமிழர் அiவையன் உள் கட்டமைப்புக்களும் பலப்படுத்தப்பட்டுள்ளன. நோர்வேஜிய தேசியப் பத்திரிகைகளிலும் மற்றும் தமிழ்நாட்டு அரசியில் அமைப்புக்கள் மத்தியிலும் நோர்வே ஈழத் தமிழர் அவை பற்றிய விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் தாயகத்தின் தொடர்ச்சியும் வளர்ச்சியுமான அனைத்து ஒடுக்கு முறைகளுக்குமான விடுதலைக்கு முழு மூச்சுடன் பாடுபடும் என தமிழர் திருநாளாம் தை நாளில் நோர்வே ஈழத் தமிழர் அவை உறுதி பூணுகின்றது.

தமிழ் மக்களுடைய அபிலாசைகளுக்கும் அமெரிக்காவினது நலன்களுக்கும் அமைவான ஓர் தீர்வைகாண முயல வேண்டும் என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அவர்களிடம் தமிழ்ஈழ மக்கள் அவை வேண்டுகோள்

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அவர்கள் சமாதானத்திற்கான நோபல் பரிசை பெற்றுக் கொள்வதற்காக கடந்த வியாழன்று(10.12.09) நோர்வேக்கு சமூகமளித்திருந்த போதே இவ்வேண்டுகோள் நோர்வே தமிழ்ஈழ மக்கள் அவையால் விடுக்கப்பட்டிருந்தது. அமெரிக்க அதிபருக்கும் மற்றும் ஊடகங்களுக்கும் விடுக்கப்பட்ட அறிக்கையிலே இக் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. [மேலும்]

 

நோர்வே தமிழீழ நிறுவனங்களின் தெரிவவைத் தேர்தல்

நோர்வே ஈழத்தமிழர் அவைக்கான தேர்தல்

© www.ncet.no